தேனி அருகே கல்லூரி மாணவனின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: இன்னொரு மாணவர் கைது!!
தேனி அருகே ஜெயமங்கலம் போலீஸ் சரகம் அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். அவரது மகன் பிரகாஷ் (வயது 18). அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் சின்னம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரகாஷ் மட்டும் இருந்தார்.
மாலை நேரம் சின்னம்மாள் வீடு திரும்பினார். அப்போது தனது மகன் பிரகாஷ் கழுத்து அறுபட்டிருந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் வீரமணி (18) என்பவர் கழுத்தை அறுத்ததாக தெரிவித்தார்.
வீரமணி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். உடனடியாக பிரகாஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் வீரமணியை கைது செய்தனர்.
Average Rating