மகன்களுக்கு யார், யார் எவ்வளவு சொத்து வழங்குவது?: நடிகை சரிதா-நடிகர் முகேஷிடம் குடும்பநல கோர்ட்டு விசாரணை

Read Time:3 Minute, 47 Second

indsarithafamily.jpgகணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரு மகன்களுக்கும் நடிகை சரிதாவும், அவரது கணவரும் எவ்வளவு சொத்துக்களை வழங்குவது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டது. `தப்பு தாளங்கள்’ படத்தில் அறிமுகமாகி `அச்சமில்லை’, `நெற்றிக்கண்’, `ஜுலி’, `கணபதி’ உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சரிதா. மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் முகேசை காதலித்தார். இவர்களின் காதல் முற்றியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 17 வயதிலும், 14 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மகன்களும் சரிதா பராமரிப்பில் உள்ளனர். திருமணமான 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சமரச பேச்சு

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விசாரணை நடந்து வருகிறது. சரிதாவும், அவரது கணவர் முகேசும் பலமுறை கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி தேவதாஸ் இவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மகன்களின் நலன் கருதி இருவரும் ஒற்றுமையாக இருப்பது நல்லது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

பின்னர் குடும்பநல கோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அந்த சமரச தீர்வு மையத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். இதன் பின்னர் சரிதாவின் இரு மகன்களான சரவண், ஜீசாஸ் ஆகியோர் குடும்பநல கோர்ட்டுக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

சொத்துக்கள்

நேற்று இந்த வழக்கு சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அங்குள்ள சமரச தீர்வு மையத்தில் நடிகை சரிதாவும், அவரது கணவர் நடிகர் முகேசும் ஆஜரானார்கள். பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சரிதாவின் வக்கீல் ரீட்டா சந்திரசேகரன் உடன் இருந்தார்.

நடிகை சரிதா பெயரிலும், நடிகர் முகேஷ் பெயரிலும் சொத்துக்கள் உள்ளன. இரு மகன்களின் எதிர்காலம் கருதி இவர்களுக்கு சரிதாவும், அவரது கணவர் முகேசும் எவ்வளவு சொத்துக்களை வழங்குவது என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. மேற்கொண்டு இதுபற்றி பேசி முடிவு எடுக்க வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 26-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

indsarithafamily.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவியின் 53 பக்க கடிதம் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்
Next post நெல்லை அருகே லாரி மீது அரசுபஸ் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்