சிகரெட் வாங்கித்தர மறுத்த வாலிபரின் முகத்தை பிளேடால் கிழித்த கொடூரம்!!
டெல்லியில் சிகரெட் வாங்கித் தர மறுத்த வாலிபரின் முகத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வரும் 16 வயது வாலிபர் ராஜேஷ். நேற்றிரவு, வெளியே சென்றிருந்த ராஜேஷ் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு அருகே உள்ள மதாங்கிர் என்ற பகுதியில் ராஜேஷை வழிமறித்த ஒருவன் பக்கத்தில் உள்ள கடையில் தனக்கு சிகரெட் வாங்கித் தருமாறு கேட்டுள்ளான்.
முடியாதென்று மறுத்த ராஜேஷின் கன்னத்தில் குத்தி ப்ளேடால் கிழித்து விட்டு அங்கிருந்து அவன் தப்பி ஒடிவிட்டான். ரத்தக்காயங்களுடன் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ராஜேஷை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலிசில் புகாரளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்ரவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Average Rating