கணவனை கொன்ற பெண்- கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை!!
Read Time:1 Minute, 17 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்ணுக்கும் அவருக்கு துணைபோன நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக கடந்த 2008-ம் ஆண்டு குருசஹாய்கஞ்ச் பகுதியில் தனது கணவன் வினோத் குமார்(40) என்பவரை கொன்ற வழக்கின் விசாரணையில் குற்றவாளியான அந்தப் பெண்ணுக்கும் அவருக்கு இந்த கொலையில் உடந்தையாக இருந்த கவுதம் என்பவருக்கும் மரண தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கன்னோஜ் மாவட்ட கூடுதல் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். மரண தண்டனை தீர்ப்பை மாநில ஐகோர்ட் உறுதிப்படுத்திய பின்னர் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
Average Rating