மனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்!!
Read Time:1 Minute, 9 Second
ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கானல் மாவட்டத்தை சேர்ந்தவர், சக்தி பிரசாத் ஆச்சார்யா. அரசு ஊழியரான இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் தனது மகன் பிது பூஷன் ஆச்சார்யா(32)வின் துயரநிலையை கண்டு தினந்தோறும் மனம் வெதும்பி, வேதனைப்பட்டு வந்தார் சக்தி பிரசாத். நேற்றிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது மனதை கல்லாக்கிக் கொண்டு மகனின் கழுத்தை ஒரு தாம்புக்கயிற்றால் இறுக்கிக் கொன்றார்.
பின்னர், அதே கயிற்றின் மூலம் வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு அவரும் உயிரிழந்தார். இந்த இரு மரணங்களும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating