இரணியல் அருகே வீடு புகுந்து பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு: அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கைது!!

Read Time:2 Minute, 25 Second

514d651b-4dbc-4b99-a395-823e2f4e736c_S_secvpfஇரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 38).

இவரது பக்கத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். தொழிலாளியின் மகள் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்காக வெளியே சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது பிரதீப்குமார் வீட்டுக்குள் புகுந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. மாலையில் வேலைக்கு சென்று திரும்பிய தனது தாயாரிடம் பிரதீப்குமார் தன்னை கற்பழித்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த பிரதீப்குமார் திருமண ஆசை காட்டி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். நேற்று நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு வீடு புகுந்து எனது மகளை அவர் கற்பழித்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா விசாரணை நடத்தினார். பின்னர் மாணவியை கற்பழித்தது உள்பட 4 பிரிவுகளில் பிரதீப்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கைதான பிரதீப்குமாரின் தந்தை ராஜ்குமார் குமரி மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக உள்ளார். பிரதீப்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடங்குளம் அருகே இளம்பெண்–சிறுவன் கொலையில் மர்மம் நீடிப்பு!!
Next post செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு?