போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கிளப்பில் 23 பேர் கைது!!
தேனாம்பேட்டையில் உள்ள கிளப்பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.
அங்கிருந்த 23 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் தொடர் புடையவர்கள் குறித்து தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆந்திராவில் வசித்து வரும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இதே சூதாட்ட கிளப்பில் ரூ.60 லட்சம் இழந்ததால் தற்கொலை செய்து உள்ளார்.
இதேபோல் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர், மனைவியின் நகையை அடகு வைத்து சூதாடியதில் ரூ.20 லட்சம் இழந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தொழில் அதிபரின் மனைவி தற்கொலை செய்து இருக்கிறார்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating