சூனியம் வைத்ததாக சந்தேகம்: 95 வயது மூதாட்டி உள்பட 3 பேர் துடிதுடிக்க படுகொலை!!
Read Time:1 Minute, 21 Second
மூட நம்பிக்கைகளுக்கு பேர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள காட்கு கிராமத்தில் வசிக்கும் சுதன் ஹன்ஸ்தா(56) என்பவர் வீட்டுக்கு நேற்றிரவு வந்த ஒரு கும்பல் அவரையும் அவரது மனைவி டெல்ஹோ(50) மற்றும் தாயார் சோனியா(95) ஆகியோரையும் மிக கொடூரமான முறையில் சித்ரவதை செய்து, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொன்றது. அவர்களின் வீட்டுக்கும் தீ வைத்துவிட்டு தப்பியோடியது.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating