பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைந்தது: கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை!!

Read Time:1 Minute, 16 Second

79ab7dc0-2b50-4ef8-a4da-b209eca0453d_S_secvpfகோவை செட்டி பாளையம் பொன்நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். கார்பெண்டர். இவரது மகள் மோகன லட்சுமி (வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்தார்.

சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்ணே பெற்று இருந்தார். இதன் காரணமாக கல்லூரியில் சேர அவர் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!!
Next post கூடங்குளம் அருகே தாய்–மகன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது!!