இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா-நார்வே முடிவு
Read Time:56 Second
இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா, நார்வே ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. 3 நாள் பயணமாக நார்வே சென்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதன்கிழமை அந்நாட்டு நிதி அமைச்சர் கிறிஸ்டின் ஹால்வர்சன், சுற்றுச் சூழல் மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோலெம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. நார்வே சென்றச் சிதம்பரத்தை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் மகேஷ் சத்தேவ் வரவேற்றார்.