கணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது!!

Read Time:2 Minute, 21 Second

5f7c685f-e020-4d5d-93a1-f8b36fda57ee_S_secvpfகுஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா உதேபூர் மாவட்டம் சிமோல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்பாய் ராத்வா. இவருடைய 19 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதை அறிந்த வசந்த்பாய், தன் மகளை தல்சார் கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி வந்த அந்தப் பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார்.

திடீர் என ஒருநாள் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிக்கொண்டு காதலருடன் ஓடிப்போய் விட்டார். உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பக்கத்து கிராமத்தில் காதலனுடன் தங்கியிருந்த அவரை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

மீண்டும் காதலனுடன் ஓடிப்போய்விடக் கூடாது என்று நினைத்த வசந்த்பாய், தனது மகளை வீட்டில் அடைத்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவரது காலை இரும்பு சங்கிலியால் கட்டி அவரை ஒரு குடிசைக்குள் போட்டு அடைத்து வைத்தார்.

இதுகுறித்த தகவல் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவருக்கு கிடைத்ததும், அவர் உடனடியாக பெண்கள் உதவி மையத்திற்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்சுடன் வந்த பெண்கள் உதவி மைய நிர்வாகிகள், குடிசைக்குள் அடைபட்டிருந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெற்ற மகளை இரும்பு சங்கிலியால் கட்டி வீட்டிற்குள் பூட்டி வைத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு!!
Next post சினிமா கம்பெனியில் வேலை செய்வதாக கூறி அமெரிக்கா சென்ற இந்தியர் மீது விசா மோசடி வழக்கு!!