திருமண ஆசை காட்டி காதலியை கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன் கைது!!
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் அழக முத்து மகள் சசிகலா (வயது 20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பொறியியல் படித்து வருகிறார்.
இவரும் அதே ஊரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மதிவாணன் (28) என்பவரும் சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் தனது பெற்றோர் விருப்பப்படி லால்குடி பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனாலும் தனது காதலி சசிகலாவையும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவிதா பிரசவத்திற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயத்தில் மதிவாணன் மீண்டும் காதலி சசிகலாவிடம் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.
இதில் சசிகலா கர்ப்பிணி ஆனார். இதனை டாக்டரிடம் சென்று உறுதி செய்த சசிகலா, மதிவாணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் மதிவாணன் மறுத்து விட்டார். இதனால் சசிகலா முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிந்து மதிவாணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating