வடிவேலுவுடன் ஸ்ரேயா நடிக்கக் காரணம்
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு வந்தும் அவற்றையெல்லாம் ஒதுக்கிய ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால்… மல்லிகா ஷெராவத்தா? மர்லின் மன்றோவா?…’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கும்போது வடிவேலுவின் டைமிங் காமெடியைப் பார்த்து அடிக்கடி சிரித்துவிடுவேன். அதனாலேயே பலமுறை “ரீ டேக்’ வாங்கினேன். அதோடு பாடல் காட்சியின் முதல் நாளின்போது என்னைப் பார்க்க ஒரே கூட்டம்.
அடுத்த நாள்தான் எனக்கு வடிவேலுவுடன் “காம்பினேஷன் டான்ஸ்’. அப்போது என்னைப் பார்க்க வந்த கூட்டத்தைப் போல இரண்டு மடங்கு கூட்டம் வந்துவிட்டது. கூட்டத்தைப் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன். எல்லாரும் வடிவேலுவைப் பார்க்க வந்தவர்கள்தான்.
நான் வடிவேலுவுடைய தீவிர ரசிகை. டி.வி.யில் தமிழ்ச் சேனல் பார்த்துக்கொண்டிருந்தால் அது வடிவேலுவின் காமெடி சீனாகத்தான் இருக்கும்.
அவருடைய பாடி லாங்வேஜும் டைமிங் சென்ஸýம் எனக்குப் பிடித்தவை. அதனால் அவருடன் ஒரு பாடலில் நடிக்க சம்மதித்தேன்” என்று காரணம் கூறுகிறார் ஸ்ரேயா.
இருந்தாலும், நெல்லை மாவட்டத்தில் ஐந்தரை நாள்கள் படமாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியில் நடனமாட ஸ்ரேயாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் ஒரு காரணம்.