புழல் அருகே கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!
புழலை அடுத்த புத்தகரம், ரேவதி நகரில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. ஓய்வு பெற்ற அரசு கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர்.
இவர் கடந்த 25–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. மர்ம ஆசாமிகள் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
பார்த்தசாரதி வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம் அஜீஸ் நகரை சேர்ந்தவர் நாராயணன். திருவொற்றியூர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நாராயணனின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.15 ஆயிரத்தை அள்ளிச் சென்று விட்டனர்.
Average Rating