டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை கோவாவில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!!
Read Time:1 Minute, 23 Second
டெல்லியைச் சேர்ந்த 22 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கோவாவில் உள்ள அஞ்சுனா பீச்சுக்கு டாக்சியில் சென்று கொண்டிருந்தனர்.
அர்போரா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தங்களை போலீசார் போல் காட்டிக் கொண்ட சிலர் அவர்கள் டாக்சியை வழிமறித்துள்ளனர். அவர்களின் கைப்பையையும் பறித்துக் கொண்டு அருகிலுள்ள ப்ளாட் ஒன்றிற்கு கூட்டிச் சென்று அவர்களை அடித்து துன்புருத்திய அவர்கள் 5 பேரும், கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் வந்த டாக்சியின் டிரைவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து விரைந்து செயல்பட்ட கோவா போலீசார் அந்த ப்ளாட்டைக் கண்டுபிடித்து 5 கொடூரர்களையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating