விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை!!
விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, மூன்று முறை கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவரை டெல்லி கோர்ட் விடுதலை செய்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்த மற்றொரு நபரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்றாண்டுகளில் இந்த திருமண வாழ்க்கையும் கசந்துப் போகவே, 2007-ம் இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, அவரிடம் இருந்து தனிப்பட்ட முறையில் ஜீவனாம்சம் கேட்டு வற்புறுத்தி, பெற்றும் வந்தார்.
இதற்கிடையில், முறைப்படி விவாகரத்து செய்த பின்னரும் தன்னை வற்புறுத்தி உடலுறவு வைத்து கொண்ட இரண்டாவது கணவர், அதன் விளைவாக மூன்று முறை உருவான கருவை கலைத்துவிடும்படி மிரட்டியதாக உள்ளூர் போலீசில் அந்தப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நபர் மீது டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, ஜீவனாம்சம் தருவதை இரண்டாவது கணவர் நிறுத்தி கொண்டதால் அவரிடம் இருந்து மிரட்டி பணம் பெற என்ன செய்யலாம்? என்று ஒரு வக்கீலை சந்தித்து ஆலோசித்த அந்தப் பெண், வக்கீலின் ஆலோசனையின்படி கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு செய்ய தூண்டி மிரட்டியதாக பொய்ப்புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
இந்த புகார்களுக்கு தேவையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மனுதாரரான அந்தப் பெண் தொடர்ந்த பொய் வழக்கை தள்ளூபடி செய்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி விரேந்திர பட் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating