நர்சிங் மாணவியை கற்பழித்த பள்ளி தாளாளர் திருச்சி சிறையில் அடைப்பு!!

Read Time:4 Minute, 3 Second

62f43a7e-ac49-45ab-8ddb-07a7766b4619_S_secvpfதிருச்சி அருகே உள்ள சமயபுரம் புது பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). இவர் அந்த பகுதியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் மீது அதே பகுதியை சேர்ந்த 19 வயதான நர்சிங் மாணவி ஒருவர் சமயபுரம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:–

நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்–2 படித்த போது சமயபுரத்தில் மழலையர் பள்ளி நடத்தி வரும் ராஜசேகரிடம் டியூசன் படித்து வந்தேன். அப்போது என் மீது அக்கறை காட்டுவது போல அவர் அடிக்கடி சில்மிஷம் செய்தார். பின்னர் லால்குடியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் சேர்ந்து படித்த போது ராஜசேகர் அடிக்கடி என்னை பார்ப்பதற்காக கல்லூரிக்கு வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று எனது பெற்றோர் நிறுத்தி விட்டனர்.

பின்னர் சமயபுரம் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படிக்க சேர்ந்தேன். மீண்டும் ராஜசேகரிடம் கோச்சிங் கிளாசில் சேர்ந்தேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வியாழக்கிழமை இரவு தனியாக இருக்க வைத்த ராஜசேகர் எனது விருப்பம் இல்லாமல் வாயை பொத்தி கீழே தள்ளி என்னை கற்பழித்தார்.

நான் மயக்க நிலையில் இருந்த போது செல்போனில் எனது உடலை படம் எடுத்து வைத்து கொண்டு இதனை வெளியில் சென்னால் எனது தாய், தந்தையை கொலை செய்து விட்டு இந்த படங்களை இண்டர்நெட்டில் பரவ விடுவேன் என்று மிரட்டினார். மேலும் அந்த காட்சிகளை காட்டி என்னை பல முறை அனுபவித்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன்.

இதை தொடர்ந்து நான் அவரை திருமணம் செய்யுமாறு கூறியதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று எனது கர்ப்பத்தை கலைத்தார். மேலும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போதெல்லாம் அடித்து விரட்டினார். எனது வாழ்க்கையை சீரழித்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தியபோது உண்மை என்ன என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பள்ளி தாளாளர் ராஜசேகர் மீது கற்பழிப்பு, கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை அவரை கைது செய்தனர். பின்னர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் 3–ல் மாஜிஸ்திரேட் அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் அவரை வருகிற 16–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து ராஜசேகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நர்சிங் மாணவி கற்பழிப்பு புகாரில் பள்ளி தாளாளர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுனந்தாவின் சாவை இயற்கை மரணம் என்று அறிவிக்க நெருக்கடி கொடுத்தனர்: டாக்டர்கள் திடுக்கிடும் தகவல்!!
Next post மதுரவாயலில் பூட்டிய வீட்டில் 2 குழந்தைகள் கொலை: தந்தை மாயமானதால் பரபரப்பு!!