கரூரில் மது போதையில் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு: மகளிர் போலீசில் தாய் புகார்!!

Read Time:1 Minute, 58 Second

1e30b74a-7d02-414f-af29-c0cdc18d9083_S_secvpfகரூர் தான்றிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரது தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் ஒரு நிலத்தகராறு விஷயமாக மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவரை தொடர்பு கொண்டோம். தன்னை வக்கீல் என அறிமுகம் செய்து கொண்ட அவர் வழக்கு விஷயமாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் எனது மகள் மாலதியை கடந்த ஆண்டு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை.

இந்த நிலையில் எனது மகள் வாழ்வை தொலைத்துவிட்டு தற்போது வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் கேட்ட போது, கணவர் வக்கீல் இல்லை என்றும், தினமும் குடித்துவிட்டு வந்து ‘செக்ஸ் டார்ச்சர்’ செய்வதாகவும், அதற்கு அவரது தந்தை வீரன், தாயார் ஜானகி ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்தார். எனது மைனர் மகளை கடத்தி கற்பழித்த சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கரூர் அனைத்து மகளிர் போலீசார், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!
Next post நிலத்தில் ஏர் உழுதபோது 50 அடி கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது: விவசாயி பலி!!