நிலத்தில் ஏர் உழுதபோது 50 அடி கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது: விவசாயி பலி!!
Read Time:1 Minute, 23 Second
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. சொந்தமாக டிராக்டரும் வைத்துள்ளார்.
நிலத்தில் சாந்தகுமார் இன்று காலை டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டிருந்தார். அப்போது டிராக்டரை பின்புறமாக வந்து திரும்பியபோது, எதிர்பாராத விதமாக அருகே உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது. சாந்தகுமார் கிணற்றுக்குள் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்டார். கிணற்றிலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த கலசப்பாக்கம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் சாந்தகுமார் பிணத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக பிணம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating