மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் பலி!!
மேட்டுப்பாளையம் பில்லூர் பர்லி மின் நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). இவர் தனது நண்பர் எட்வினை பார்க்க குடும்பத்துடன் அருகில் உள்ள குடியிருப்புக்கு புறப்பட்டார்.
இடையே மா, பலா தோட்டங்கள் உள்ளன. அங்கு பலா மரத்தில் பலாவை பறித்து காட்டுயானை தின்று கொண்டிருந்தது. மனிதர்களை பார்த்த காட்டுயானை துரத்தியது. இதில் மற்றவர்கள் தப்பி விட்டனர்.
சுப்பிரமணியன் மட்டும் யானையிடம் சிக்கினார். யானை காலால் நசுக்கியதால் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காட்டுயானை அதே பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Average Rating