ஆந்திராவில் இருந்து மிளகாய் மூட்டைகளுடன் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல்: சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி பகுதியில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் பற்குணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் மிளகாய் மூட்டைகளுடன் சேர்த்து 120 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் இருந்த சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஸ்டீபன் (வயது 28), சேதுபாண்டி மகன் தர்மேந்திரன்(28) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து மிளகாய்களுடன் இந்த கஞ்சாவை வாங்கி வந்திருப்பதும், ராமேசுவரம் கடல் வழியாக இலங்கை கடத்துவதற்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும்.
Average Rating