சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!!
சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சிவகங்கை இளையான்குடி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கு போட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்த கல்லூரி மைதானப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.
போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் கீழவாணியங்குடியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 21), இந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (18), சிவகங்கையை சேர்ந்த முகம்மது இப்ராகிம் (19) என தெரியவந்தது.
இதில் முகம்மது இப்ராகிம் சிவகங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த சண்முகம் (20), வாணியங்குடியைச் சேர்ந்த பிரதீப் (20) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்ததும் போலீசாரை பார்த்ததும் மற்ற 2 பேரும் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தினேஷ்குமார், சதீஷ்குமார், முகம்மது இப்ராகிம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Average Rating