பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை

Read Time:1 Minute, 33 Second

baby_and_stork.gifதனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெனியாய – தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை மாலை இவர் நஞ்சு குடித்து ஆபத்தான நிலையில் மொறவக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார். பாலகிருஷ்ணன் சரோஜாதேவி (20 வயது) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார். மொறவக்க ஆஸ்பத்திரியில் இவரது மரண விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சம்பவதினம் பிள்ளைக்கு பால் இல்லாமல் இறந்த மனைவி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், தாயார் பணம் இல்லை என்று கூறியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார் எனவும் தான் கடையில் கடனுக்கு பால்வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவேளையில் அவர் நஞ்சு குடித்துவிட்டதாக சகோதரி ஓடிவந்து கூறியதாகவும் கணவன் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது கூறினார். தற்கொலை என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்
Next post தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் மாலைதீவு அரசு தீவிரம்