பரமக்குடியில் போலி டாக்டர் கைது!!
Read Time:46 Second
பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் கமலா நேரு நகரை சேர்ந்தவர் வளமோகன் (வயது45). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளீனிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக எமனேசுவரம் அரசு மருத்துவமனை டாக்டர் அருணேஸ்வரி புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை தலைமையில் எமனேசுவரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது முறையாக படிக்காமலும் ஆவணங்கள் இன்றியும் வளமோகன் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating