கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது, ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கார் டிரைவர் கைது

Read Time:3 Minute, 15 Second

arrestforiegn2.jpgஅல்சூர் போலீஸ் சரகம் கார்ப்பரேஷன் காலனியை அடுத்த உருது பள்ளி கூடத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரேகா (வயது 13). இவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முனியப்பா (வயது 45) என்பவர் ரேகாவை அடிக்கடி தனியாக அழைத்து சென்று அவளுக்கு பணம் கொடுத்தும், புதிய துணிகளை வாங்கி கொடுத்தும் மற்றும் ஆசை வார்த்தை கூறியும் தொடர்ந்து 10 நாட்கள் அவரை கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேகா கர்ப்பம்மானாள். தான் கர்ப்பம் ஆனது அவளுக்கு தெரியவில்லை. இந்த நிலையில், அவளின் வயிற்றில் கட்டி இருப்பதாக கருதி அவரது பெற்றோர், பெங்களூரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அவளை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவளை பரிசோதித்து விட்டு, ரேகா கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறந்து விடும் என்றும் கூறினார்கள்.

இதனால் அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ரேகா கர்ப்பம் ஆனதற்கு யார் காரணம் என்று அவளிடம் கேட்டனர். அப்போது அவள், தன்னை கார் டிரைவர் முனியப்பா சில மாதங்களுக்கு முன்பு தனியாக பல தடவை அழைத்து சென்று, தனக்கு பணம் கொடுத்தும், புதிய துணிகள் வாங்கி தந்தும், ஆசை வார்த்தை கூறியும் தன்னை கற்பழித்ததாக கூறினாள். இதற்கிடையே ரேகாவுக்கு நேற்று காலை சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

கைது

இதைத்தொடர்ந்து, ரேகாவிடம் டாக்டர்கள் விசாரணை நடத்திய போது முனியப்பா தன்னை கற்பழித்ததை தெரிவித்தாள். அவள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட முனியப்பாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் ஏற்கனவே இதே போன்று ஒரு சிறுமியை கற்பழித்து அந்த சம்பவத்தில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் 2 குடும்பத்தினரும் சமாதானமாகி புகாரை வாபஸ் வாங்கி விட்டனர். இது மட்டுமல்லாமல் அவர் 30 வயது பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என்பதும் தெரியவந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே
Next post 5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை