சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி!!
Read Time:1 Minute, 9 Second
பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதைகளாகி வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தன் சக பள்ளி மாணவர்கள் 2 பேரால் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டங்காவூர் நகரில், நேற்று மார்க்கெட்டிற்கு சென்றிருந்த அந்த மாணவியை அவளது பள்ளியில் படிக்கும் 2 வாலிபர்கள் நைசாக பேசி தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டனர். அவர்களைப் பார்த்ததும் 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய அவர்களை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating