கள்ளக்காதலியுடன் உல்லாசம்: அவமானத்தில் வாலிபர் தற்கொலை!!

Read Time:2 Minute, 43 Second

b71080e3-6e76-4fcc-a945-5d94f97fff6c_S_secvpfகோவை சரவணம்பட்டி கணபதிபுதூர் 8–வது வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). ஒர்க்ஷாப் தொழிலாளி. திருமணமாகவில்லை.

மோகன்ராஜூக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அரசல்புரசலாக வெளியே தெரிந்தது. காமம் கண்ணை மறைத்ததால் இதனை கள்ளக்காதல் ஜோடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மனைவியின் கள்ளக்காதல் குறித்து கணவருக்கு தெரிய வந்தது. ஆத்திரமடைந்த கணவர் இது குறித்து மனைவியிடம் கேட்டு கண்டித்தார். அப்படி யாரிடமும் எந்த தொடர்பும் இல்லை. வீண் வதந்திதான் என்று மனைவி மறுத்தார்.

நேற்று கணவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மோகன்ராஜ் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்குள் சென்றார். சந்தேகமடைந்த கணவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியும் மோகன்ரஜூம் உல்லாசமாக இருப்பதை நேரில் கண்டார்.

அதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். கள்ளக்காதலியின் கணவரிடம் சிக்காமல் இருக்க மோகன்ராஜ் ஓட்டம் பிடித்தார்.

கையும் களவுமாக சிக்கிய மனைவி வேறுவழியின்றி அங்கேயே இருந்தார். கள்ளக்காதல் குறித்து கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். கள்ளக்காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது.

ஊரேகூடி விட்டதால் அவமானம் தாங்கமுடியாத மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவேற்காட்டில் கொலை வழக்கு கைதி நண்பருடன் மர்ம சாவு!!
Next post மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை: கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை!!