திருப்பதியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய டீ மாஸ்டர் கைது!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மல்லி (வயது 30). கணவரை இழந்த இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.
இவர் திருமலையில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊற்றும் தொழிலை செய்து வருகிறார்.
இவருக்கும் திருமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அருகில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் சிவா (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே பணம் தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது.
நேற்று மாலை அங்குள்ள குழாயில் மல்லி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிக்கும் மல்லிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ரவி கத்தியால் மல்லியை சரமாரியாக குத்தினார். இதில் மல்லி நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
Average Rating