இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி

Read Time:54 Second

இந்தோனேஷியாவில் சுலாவேசி தீவில் உள்ள கேந்தாரி நகரில் உளள கடலில் ஒரு படகு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அங்கு நிறைய தீவுகள் உள்ளன. தீவுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு படகுகளே பயன்படுகின்றன. இப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு படகில் ஓட்டை விழுந்தது. இதனால் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. தண்ணீர் படகுக்குள் புகுந்து படகு கடலில் மூழ்கியது. இதில் 30 பயணிகளை காணவில்லை. அவர்கள் இறந்து இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களின் உடல்களை தேடி கண்டு எடுக்கும் பணியில் மீட்பு குழுவினர் 6 படகுகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380′ சிட்னிக்கு முதல் பயணம்
Next post தீவகத்திலிருந்து இறைச்சி எடுத்துவர தடை விதிக்குமாறு கோரிக்கை