கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!

Read Time:3 Minute, 48 Second

bd900d19-9f1a-41da-8371-96fc9b9f92ce_S_secvpfகோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ஷோபனா(25). என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஷோபனா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

முருகேசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். கணவரிடம் குடிபழக்கத்தை கைவிடும்படி பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. இந்தநிலையில் ஷோபனாவின் உறவினர் மகள் திருமணம் பெருமாநல்லூரில் நேற்று காலையில் நடந்தது. இதற்காக கணவன்– மனைவி இருவரும் பெருமாநல்லூருக்கு சென்று அங்கு நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு சென்றபோது முருகேசன் மது குடித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டுக்கு வந்ததும் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஷோபனா வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது சத்தம் கேட்டு முருகேசன் சமையலறையை எட்டிப்பார்த்தார்.

அங்கு ஷோபனா சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முருகேசன் என்ன செய்வது என்று அறியாமல் அலறித்துடித்தார்.

பின்னர் ஷோபனாவின் உடலை தூக்கில் இருந்து இறக்கி கீழே கிடத்தினார். அதன் பின்னரும் துக்கத்தில் மூழ்கிப்போன முருகேசன் மனைவி இறந்ததற்கு தனது குடிப்பழக்கம் தானே காரணம் மனைவி இல்லாத உலகில் இனி வாழக்கூடாது என தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் முன்கதவை பூட்டிக்கொண்டு மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே ஷோபனாவின் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மாலையில் வீடு திரும்பி உள்ளனர். மாலை 6 மணிக்கு மேலும் முருகேசன் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கணவன்–மனைவி ஆகிய 2பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கணவன்–மனைவி இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமலூர் அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!