பாலக்காட்டில் வீட்டுக்குள் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு!!

Read Time:1 Minute, 59 Second

d2b468f1-f52b-470f-a013-d66aad1e763e_S_secvpfகேரள மாநிலம் திருவல்லானையை சேர்ந்தவர் சுமாம் (வயது 48). இவர் பாலக்காடு அருகே உள்ள அகத்தே கரை என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவி பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் கல்லூரிக்கு செல்ல வசதியாக பாலக்காடு அருகே உள்ள நடக்காவில் உள்ள 2–வது வீதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு சுமாம் வேலைக்கு செல்லவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கல்லூரி ஆசிரியைகள் சுமாமை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. அவர்கள் சுமாமை பலமுறை அழைத்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதைத் தொடர்ந்து ஹேமாம்பிகை நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இமாமின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டுக்குள் சுமாம் பிணமாக கிடந்தார். அருகே ரத்தம் உறைந்த நிலையில் கட்டியாக இருந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பே சுமாம் மர்மமான முறையில் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஹேமாம்பிகை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்பென்னும் வலைக்குள் இமயமும் வசப்படும்: காதலில் விழுந்து துப்பாக்கியை தூக்கி எறிந்த நக்சலைட் கமாண்டர்!!
Next post புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!