திருச்சூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி!!

Read Time:2 Minute, 5 Second

c00ceb4e-ffd0-4a4b-93b6-32d78325ba14_S_secvpfகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அய்யன்பொறையை சேர்ந்தவர் சபாஷ்டின். இவரது மகள் திவ்யா (வயது 20). இவர் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இன்று காலை தோழிகள் 2 பேருடன் கல்லூரிக்கு செல்ல அங்கமாலி ரெயில் நிலையத்துக்கு திவ்யா வந்தார்.

அங்கு முதலாவது நடைமேடையில் இருந்து 2–வது நடைமேடைக்கு செல்ல திவ்யா உள்பட 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். திவ்யாவின் தோழிகள் 2 பேரும் தண்டவாளத்தை கடந்து நடைமேடைக்கு சென்று விட்டனர். ஆனால் திவ்யாவால் நடைமேடையில் ஏற முடியவில்லை.

அபபோது அந்த வழியாக ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த திவ்யாவின் மீது மோதியது. இதில் தலை துண்டாகி உடலை ரெயில் இழுத்து சென்றது. ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். உடனடியாக ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். அங்கமாலி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு தீயணைக்கும் வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்கமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!
Next post 7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!