ஈரோட்டில் அரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு!!
Read Time:1 Minute, 12 Second
ஈரோடு பழைய ரெயில் நிலையம் ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் சிம்ரன், கோசனா இவர்கள் இருவரும் திருநங்கைகள். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு திருநங்கைகள் இருவரும் வந்தனர்.
அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
நாங்கள் கடை கடையாக சென்று காசு வாங்கி பிழைத்து வருகிறோம். இந்த வருமானம் எங்களுக்கு போதவில்லை.
மேலும் கடைகளுக்கு செல்லும் போது சிலர் எங்களை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
எனவே எங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Average Rating