சீனாவில் வெடிவிபத்து: 43 பேர் பலி
Read Time:1 Minute, 1 Second
சீனாவில் நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்காக ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி வெடித்து சிதறியதில் 43 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். நிலக்கிரி சுரங்கங்கள் நிறைந்த சீனாவின் வட மாகாணமான ஷான்ஸ்க்கியில் டாங்சாய் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை இவ்விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமாகியது.
சீனாவில் நிலக்கரி சுரங்கம் சார்ந்த வெடி விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் 33 பேரும், ஜூன் மாதத்தில் 10 பேரும் வெடி விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.