நயன் தாராவின் இந்த புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..!!
நயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளிவந்தது.
இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சிகள், விக்னேஷ் சிவனின் தோளில் கைபோட்டபடி நயன்தாரா போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகியிருந்தது.
அந்த புகைப்படத்தில் நயன்தாராவை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தனர். அதாவது நயன்தாரா முந்தைய படங்களில் இருந்ததைவிட இந்த படத்தில் அப்படியே உருமாறிப் போயுள்ளார். பழைய பொலிவு, வசீகரம் எதுவும் இல்லை. உடல் மெலிந்து, அழகும் மங்கிவிட்டது. ஏன் இப்படி ஆனார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இரவு, பகல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துள்ளார் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் சூட்டிங்குக்கு விடுமுறை விட்டு கேரளா சென்று மூலிகை மசாஜ் சிகிச்சை பெற்று பழைய அழகை கொண்டு வரும் முடிவில் இருக்கிறாராம்.
Average Rating