தானேவில் கணவன் மீது மனைவி கற்பழிப்பு புகார்!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் வசிக்கும் 36 வயது பெண் தனது கணவன் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தன்னை பலமுறை லாட்ஜ்களுக்கு அழைத்து சென்று கற்பழித்த சுதிர் கோட்கே என்பவர், பின்னர், ஷிரடி சாய்பாபா கோயிலுக்கு சமீபத்தில் அழைத்து சென்று என்னை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று கூறி எனது நகைகளை எல்லாம் வாங்கி கொண்டார்.
தனது வாக்குறுதியை காப்பாற்றாத அவர், இது தொடர்பாக நான் கேள்வி எழுப்பியபோது என்னை திட்டி, அடிக்க வருகிறார். எனவே, 2012-ம் ஆண்டு என்னை பலமுறை லாட்ஜ்களுக்கு அழைத்து சென்று கற்பழித்த அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள கல்யான் பகுதி மகாத்மா புலே போலீசார், தலைமறைவாக இருக்கும் சுதிர் கோட்கேவை தேடி வருகின்றனர்.
Average Rating