காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 13 Second
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய காவல்படை வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இங்குள்ள ரீசி மாவட்டம், கக்ரியால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நேற்று மாலை காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயங்கி கிடந்தார். சகவீரர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் அளிக்க, அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மனோஜ் குமாரின் திடீர் முடிவுக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Average Rating