உ.பி.யில் 3 பெண்களை கற்பழித்த 8 பேர் கும்பல்!!
Read Time:56 Second
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 35 வயது இருக்கும் மற்ற இருவரும் 15 மற்றும் 13 வயதுடையவர்கள். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Average Rating