திருநின்றவூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி!!

Read Time:2 Minute, 10 Second

8f98c63f-ea95-4339-b37c-c03b99d076a9_S_secvpfதிருநின்றவூரை அடுத்த கொட்டாமேடை சேர்ந்தவர் முரளி. (வயது 48). தொழில் அதிபர். அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில், செவ்வாப்பேட்டையை ஒட்டியுள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே தலையில் வெட்டுக்காயத்துடன் முரளி பிணமாக கிடந்தார்.

திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முரளி கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் அவரது உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டோர் புதுச்சத்திரத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். 300–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலம் தொடர்பாக நேற்று இரவு முரளிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி வெள்ளவேடு போலீசார் சமாதானப் பேச்சு நடத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவே முரளியின் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களை மர்ம நபர்கள் தாக்கிச் சென்று உள்ளனர். எனவே, இதன் தொடர்ச்சியாக முரளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை பரிதவிக்கவிட்டு 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!!
Next post கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!