கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!
ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது.
கண்ணன் வீட்டு உரிமையாளரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி கண்ணன் குடும்பத்தினரை வெளியே அனுப்பினார். துணி மற்றும் பொருட்களை எடுக்க அனுமதிக்காததால் அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக உறவினர்களிடம் கடன் வாங்க கண்ணன் சென்றுவிட்டார். தாட்சாயிணி குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருந்த வீட்டு முன்பே நின்றார்.
இது குறித்து அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தாட்சாயிணி இரவு முழுவதும் வீட்டின் முன்பே குழந்தைகளுடன் நடுரோட்டில் தூங்கினார்.
இன்று காலை அவர் பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating