36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்!!

Read Time:1 Minute, 53 Second

4af9d54d-8c62-432d-9b45-0577c463a690_S_secvpfதூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது36). ஆடு மேய்த்து வந்த இவருக்கு கீழ செக்காரக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் ஆனந்தராஜ் (16) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தன்னை விட 20 வயது அதிகமானவர் என்பதை கண்டு கொள்ளாமல் காளியம்மாளுடன் ஆனந்தராஜ் சுற்றி வந்தார். அதே போல் காளியம்மாளும் தன்னை விட 20 வயது குறைந்த வாலிபர் என்பதை பற்றி சிந்திக்காமல் அவருடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத் தன்று ஆனந்தராஜ் குடிபோதையில் காளியம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது காளியம்மாள் எனது வீட்டிற்கு குடித்து விட்டு வரக்கூடாது என்று கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் அருகே உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!
Next post தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!