தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி பாலக்கோடு சென்று வருவது வழக்கம்.
அப்போது தனியார் பஸ் டிரைவரான புலிக்கல் கொள்ளுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முனியப்பன் (எ) பகவதி (வயது 31) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து அந்த வாலிபர் சிறுமியிடம் அன்பாக பழகி வந்தார். அதையடுத்து தனது குழந்தையை அவரிடம் விட்டு விட்டு காய்கறி வாங்க செல்வது வழக்கம்.
அதேபோல் கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி அன்றும் அவரிடம் குழந்தையை விட்டுவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்போது குழந்தை அழுதுகொண்டு இருந்தாள். பின்னர் வீடு திரும்பிய பிறகு குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுமியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் பாலியல் பலாத்காரத்தக்கு உள்ளாகி இருப்பதும், அதனால் அவளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் தெரிந்தது. அதையடுத்து பாண்டிச்சேரி டாக்டர்கள் அப்பகுதியில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்த அவர்கள் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தர்மபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார் தனியார் பஸ் டிரைவரான முனியப்பன் (எ) பகவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதையடுத்து அந்த வாலிபரை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு பரிந்துரை செய்தார்.
அதையடுத்து அந்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி நேற்று முனியப்பன் (எ) பகவதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating