திருப்புவனம் அருகே 2 மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 48 Second

e25974a9-3b38-4634-9406-991032bb9d25_S_secvpfசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சொட்டதட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் மதுரை தத்தனேரியை சேர்ந்த கருப்பசாமி (வயது48) என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று 8–ம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவர் 2 மாணவிகளை தனியாக அழைத்து அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மேலும் ஆபாசமாகவும் பேசியதாகவும் தெரிகிறது.

ஆசிரியரே தவறாக நடந்து கொண்டதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பள்ளி தலைமை ஆசிரியை விஜயாவிடமும், பெற்றோரிடமும் தெரிவித்தனர்.

உடனே தலைமை ஆசிரியை விஜயா இது குறித்து கருப்பசாமியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்–இன்ஸ்பெக்டர் அல்லிராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கருப்பசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமங்கலம் அருகே இன்று தண்டவாளத்தில் தலைவைத்து 2 மாணவர்கள் தற்கொலை!!
Next post பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் குறித்து நடிகர் விவேக் கவலை!