புடவையா? மாட்டேன்! -போட்டோகிராபரை நடுங்க வைத்த பிரியாமணி!
பட்டுப்புடவை சரசரக்க, பட்டாசு படபடக்க போஸ் கொடுப்பதுதானே தீபாவளி வழக்கம். அப்படி ஒரு போஸ் கேட்ட போட்டோகிராபருக்கு டோஸ் விழுந்த கதைதான் இது. தீபாவளி படம் எடுக்க ப்ரியாமணி வீட்டுக்கு போனார் ஒரு புகைப்படக்காரர். ஜீன்ஸ், டி-ஷர்ட் சகிதம் வந்த ப்ரியாமணியிடம், புடவை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்தா நல்லாயிருக்குமே என்றாராம் போட்டோக்காரர். அவ்வளவுதான்… கண்களில் மத்தாப்பும், வார்த்தைகளில் சரவெடியையும் கொளுத்தி போட்டாராம் ப்ரியா. இனிமே, புடவை கட்டி போஸ் கொடுக்கவே மாட்டேன். படத்திலேயும் சரி, இப்படி போஸ் கொடுக்கிற விஷயத்திலும் சரி… புடவை தாவணியெல்லாம் பருத்தி வீரனோட போச்சு. மாடர்னா எடுத்தா எடுங்க, இல்லன்னா சாரி… (இந்த ஸாரி அந்த சாரி அல்ல) என்றாராம். ஆனால், புடவை கடை விளம்பரங்களுக்கு மட்டும் புடவை கட்டி போஸ் கொடுக்க ரெடியாக இருக்கிறார். ஏன்? டப்பு சாமி டப்பு!