மந்திர சக்தி அடைவதற்காக தங்கையின் ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்தவர் கைது!!

Read Time:1 Minute, 41 Second

98ecba97-866e-497f-a7f3-9994c90ade7a_S_secvpfமந்திர சக்தியை அடைவதற்காக ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் இதயம் மற்றும் சிறுநீரகத்தை தீயிலிட்டு யாகம் வளர்த்த காட்டுமிராண்டியை உத்தரப்பிரதேசம் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பஹ்ரியாச் மாவட்டத்தில் உள்ள மோதிபூர் பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவன் மாந்தரிக சக்திகளை பெறுவதற்காக நரபலி கொடுக்கும் நோக்கில் நேற்று தனது தங்கையின் ஒன்றரை வயது பெண் குழந்தையான நீத்துவை கடத்தி சென்றான். தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கிராமத்துக்கு வெளியே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் நீத்துவை வெட்டினான்.

அந்த குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீரகத்தை வெளியே எடுத்து, தீயிலிட்டு யாகம் வளர்த்துக் கொண்டிருந்தபோது, குழந்தையை தேடிவந்த நீத்துவின் தந்தை சந்திரிகா பிரசாத் இதை கண்டு துடிதுடித்துப் போனார். இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ராகேஷ் குமார் மற்றும் அவரது காதலி புலாவ் ஆகியோரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார்: துப்புரவு தொழிலாளர்களை சந்தித்தபின் ராகுல் பேட்டி!!
Next post மருத்துவமனை படிக்கட்டில் உருண்டு விழுந்த நோயாளி பரிதாப சாவு!!