மருத்துவமனை படிக்கட்டில் உருண்டு விழுந்த நோயாளி பரிதாப சாவு!!
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து விழுந்த நோயாளி பரிதாபமாக இறந்தார்.
ரோகினி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கர் (வயது 51) என்பவர் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஐஎல்பிஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். நேற்று மீண்டும் சில பரிசோதனைகள் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் அவர் திடீரென 3-வது மாடியின் மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்து இறந்து விட்டார். அவரது சாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை. நடந்து வந்தபோது தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது உறவினர்கள் தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்துபோன ராஜ்குமார் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
Average Rating