ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரூ.10க்கு ஆசைப்பட்டு 10 பவுன் நகையை இழந்த சுற்றுலா பயணி!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 61). ஆன்மீக சுற்றுலாவாக விக்ரமன் குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் வந்தார். நேற்று ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் உறவினர்களுடன் குளிக்க சென்றார். உறவினர்கள் நகை பணத்தை ஒரு கை பையில் வைத்து விக்ரமன் கரையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அருகில் வந்த மர்ம நபர் கீழே கிடந்த பத்து ரூபாய் நோட்டை காட்டி அது உங்களுடையதா? என கேட்டுள்ளான். விக்ரமன் குனிந்து பணத்தை எடுப்பதற்குள் அவர் வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து விக்ரமன் ஸ்ரீரங்கம் குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார். கை பையில் உறவினர்களின் 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் இருந்துள்ளது. இந்த நூதன திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating