பாகிஸ்தானில் 122 டிகிரி வெயில்; அனல்காற்றுக்கு 45 பேர் பலி
Read Time:59 Second
பாகிஸ்தானில் வெயில் 122 டிகிரி கொளுத்துகிறது. தகிக்கும் வெயில் காரணமாக அனல்காற்று வீசுகிறது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. நெருப்பை அள்ளிக்கொட்டுவது போன்ற இந்த வெயிலுக்கு கிட்டத்தட்ட 45 பேர் பலியாகி உள்ளனர்.
சுக்கர், சிப்பி, ஜாகோபாபாத், கசூர் ஆகிய நகரங்களில் தான் சாவு எண்ணிக்கை அதிகம் இருந்தது. வெயில் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், பெண்களும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.