குஜராத்தில் பெற்ற தாயை கற்பழித்ததாக காமுகன் கைது!!
Read Time:1 Minute, 23 Second
குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் 60 வயது பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்த 29
வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் இருந்து குடிபெயர்ந்து வந்து இங்குள்ள வாட்வா பகுதியில் வசித்து வந்த அந்தப் பெண்ணை நேற்றிரவு அந்த காமுகன் பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு மட்டுமின்றி நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
எனினும், அந்த கொடூரனுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர விரும்பிய அந்த தாய் இன்று வாட்வா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
Average Rating