தாயின் கள்ளக்காதலனின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 வயது சிறுவன் பலி!!

Read Time:3 Minute, 13 Second

86f05123-863f-4201-8ec7-f1e98f2381e1_S_secvpfமராட்டிய மாநிலத்தில் விதவைப் பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த முன்னாள் குற்றவாளி கண்மூடித்தனமாக தாக்கியதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள தானே மாவட்டம் மும்ப்ரா அருகேயுள்ள கவுசா பகுதியை சேர்ந்த 27 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக மூன்றாண்டுகளுக்கு முன் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு மூன்று குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முன்னாள் குற்றவாளியான பில்லா என்னும் அமீர் சயத் என்பவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதாலாக மாறியது. அடிக்கடி அந்தப் பெண்னின் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்து பழகிய தனது தனிமைக்கு அந்தப் பெண்ணின் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக பில்லா நினைத்தான். இதனால், அந்த குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடித்து, உதைத்து, சித்ரவதை செய்வதை வழக்கமாக்கி கொண்டான்.

கடந்த 8-ம் தேதி பில்லா அந்த வீட்டில் இருந்தபோது அந்தப் பெண்ணின் 4 வயது மகன் காலை உணவுக்கு பின்னர் வாந்தி எடுத்துள்ளான். இதை கண்டு எரிச்சல் அடைந்த பில்லா, அந்த சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளான். அதை தடுக்க வந்த மற்றொரு பெண் குழந்தையும் கடுமையாக தாக்கியதில் அவளது ஒரு கை உடைந்து போனது.

அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த 4 வயது மகனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்ற அந்தப் பெண், பில்லா அடித்த கதையை மறைத்துவிட்டு, வலிப்பு வந்து குழந்தை கட்டிலின் மீதிருந்து விழுந்து விட்டதாக டாக்டர்களிடம் நாடகமாடினார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தது.

இதையடுத்து, ஆவேசம் அடைந்த அந்தப் பெண் பில்லா மீது நேற்றிரவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மும்ப்ரா பகுதி போலீசார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் குற்றவாளி பில்லாவை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி கஜினி படத்தை எடுத்தது யார்?: கூகுளின் அட்டகாசமான பதில்!!
Next post என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறிவிட்டேன்: சோம்நாத்!!